Posts

Showing posts from 2014

வாழ்கைத் தத்துவத்தை உணர்த்தும் இன்னொரு மெலோடி – நதி போகும் கூழாங்கல் பயணம்

Image
சிலர் இளையராஜா பாட்டு கேட்டவுடன் பிடிக்கும் என்றும் ரஹ்மான் பாட்டு கேட்க கேட்க தான் பிடிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் பாலா, தங்கர்பச்சன், மிஸ்கின் போன்ற இயக்குனர்களின் இசையமைப்பாளர்கள், மற்றும் அவர்களுடைய இசை தேர்ந்தேடுப்புகளும் சிறப்பானதாகவே இருந்து வருகின்றன. அவ்வாறான தேர்ந்தெடுப்புகள் கேட்டவுடனே பிடித்தும் போய் விடுகிறது. இயக்குனர் மிஸ்கினின் வெளிவரவிருக்கும் படமான பிசாசு திரைப்படத்தின் பாடலும் அவ்வாறுதான். கீழே உள்ள பாடலை கேட்டு பாருங்கள் உங்களுக்கே பிடிக்கும். எனக்கு பிடித்த வரிகள் வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே

யுவனின் இசையும் நா. முத்துகுமாரின் வரிகளின் சங்கமிப்பும் – ஆனந்த யாழை மீட்டுகிறாய்

Image
வாழ்கையில் கடந்து வரும் பாதையை எழுத்துக்களாக்கவே இவ்விணையத்தை ஆரம்பித்தேன். அதில் கற்கும் பாடங்கள், பார்க்கும் படங்களிலிருந்து அதிகமானவற்றை பகிரவே ஆசைப்பட்டேன். ஆனால் வேலைப்பழு காரணமாக பதிவேற்ற நேரம் அதிகமாக கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைக்கும் நேரங்களில் இத்தளம் பதிவேற்றலாம் என இன்றிலிருந்து நினைக்கின்றேன். அந்த வகையில் இன்று தங்க மீன்கள் படத்திலிருந்து “ ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி ” பாடலை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. யுவனின் சிறந்த பாடல்களில் நிச்சயமாக இதுவும் ஒன்று என்று நான் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் தேசிய விருது பெற்ற பாடல். தந்தை, மகளுக்கு இடையிலான உன்னத உறவை ஒரே பாட்டின் மூலம் சொல்லிய பெருமை ந. முத்துகுமாரை சாரும்…. நீங்களும் கேளுங்கள். எனக்கு பிடித்த வரிகள் “அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்” -பாடல்களை விமர்சனம் செய்யுமளவிற்கு நம்மக்கு அறிவு கிடையாது; இருப்பினும் பாட்டு பிடித்துள்ளதால் பகிரலாம் என்று நினைத்து பகிரந்துள்ளேன்… –