Every human being lives in his/her own style and unique. I’m a simple human being and living in my own style of life offered by the god. I too believe in the concept “I’m not the best and not like the rest”.
ஆயிரம் மனிதர்கள் அடுக்கடுக்காய் அவனியிலே அவதரித்திட..... ஆயிரத்தில் ஒருவனாய் எனதுள்ளம் நிறைந்த அன்பான நட்பே ........ என் துயர் கண்ட போதினிலே துடித்திடும் புழுவாவாய்... உடன் என் தோள் கொடுக்கும் தோழமையாவாய்.... இன்பம் அது திளைக்கையில் மகிழ்ந்திடும் என் உயிராவாய்..... உச்சி முகர்ந்திடுவாய்..... உன்னை போல் ஓர் நண்பன் யாவருக்கும் கிடைத்திட்டால் மனம் பட்டாம்பூச்சி போல் ஜனிக்கும்.... இன்று போல் என்றும் நீ உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வல்ல இறைவா துணைபுரிவானாக!
சில நாட்களாக பாடல் வரிகளை அவதானித்து அதன் அர்த்தங்களை புரிய முற்பட்டிருந்தேன். அர்த்தம் புரிந்து பாடல் கேட்பதில் ஒரு தனி சுகம் இருப்பதையும் உணர்ந்திருந்தேன். அப்படி பாடல்களை யுடியூப்பில் கேட்கும் பொழுது சகா திரைப்பட (இன்னும் [30.10.2018] வெளிவரவில்லை) யாயும் ஞாயும் பாடல் இடை மறித்தது. இசை அற்புதமாக இருந்தது மட்டுமன்றி வரிகள் புரியாதவையாகவே இருந்தன. கேட்ட உடனேயே பிடித்தருந்தாலும் வசனங்ககளுக்கான கருத்துக்களை தேடியே தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பாடலில் ஆரம்ப வரிகள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நூல் 40 ஆவது பாடலிலிருந்து பெறப்பட்டுள்ளது. எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு பாடல் யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே கருத்துரை என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர்
இன்று தனது 60 ஆவது அகவையில் காலெடுத்து வைக்கும், பல வகைகளில் நல்லதை மட்டும் சொல்லிக்கொடுக்கும், வாழ்க்கை தத்துவத்தை எடுத்துரைக்கும் சிரேஸ்ட ஊடகவியலாளர் PMMA. Cader அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment