இன்னுமொரு தாய் நீ

உன் மடியில் தலை வைத்து தூங்கிய கணம் என்னுள் உணர்ந்தது தாயின் மடியில் தலை வைத்து தூங்கியது,
பல இன்னல்களை இலகுவில் களைய உதவிய உன்மடி இனி கிடைக்குமோ!
தாயின் மார்பில் தலை வைத்து அழுது சோர்வடைந்த ஞாபகம் எனக்கில்லை, உன் மார்பில் தலை சாய்ந்து என் சோர்வை நீக்கி இருக்கின்றேன்…
தாயின் அன்பை எனக்களித்த அம்மார்பு இனி கிடைக்குமோ!
தாய் கட்டளை இட்டு பல நாட்கள்; அதையும் தாண்டிய உன் அன்புக்கட்டளை அவ்வளவு இனிது…
பல சாதனை ஜெயிக்க உதவிய அக்கட்டளைகளை இனி யார் இடுவார்!
மொத்தத்தில் இன்னுமொரு தாயைப்போல் உன்னை உணர்கின்றேன்..
Our footprint 04.08.2018 csbesties






Comments

Popular posts from this blog

ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

அகவை அறுபது