Posts

Showing posts with the label கவிதைகள்

பூக்களால் நிரப்பு

Image
  உன் இதயத்தை பூக்களால் நிரப்பு... தேன் குடிக்கும் சாட்டிலாவது  உனை பார்க்க நான் வருவேன்...  நிறங்கொண்ட ரோஜாக்கள் தேவையில்லை... மணம் கொண்ட மல்லிகை போதும்... என் நினைவுகள் கொண்டு நீரூற்று... கனவுகளோடு காதல் செய்...

இன்னுமொரு தாய் நீ

Image
உன் மடியில் தலை வைத்து தூங்கிய கணம் என்னுள் உணர்ந்தது தாயின் மடியில் தலை வைத்து தூங்கியது, பல இன்னல்களை இலகுவில் களைய உதவிய உன்மடி இனி கிடைக்குமோ! தாயின் மார்பில் தலை வைத்து அழுது சோர்வடைந்த ஞாபகம் எனக்கில்லை, உன் மார்பில் தலை சாய்ந்து என் சோர்வை நீக்கி இருக்கின்றேன்… தாயின் அன்பை எனக்களித்த அம்மார்பு இனி கிடைக்குமோ! தாய் கட்டளை இட்டு பல நாட்கள்; அதையும் தாண்டிய உன் அன்புக்கட்டளை அவ்வளவு இனிது… பல சாதனை ஜெயிக்க உதவிய அக்கட்டளைகளை இனி யார் இடுவார்! மொத்தத்தில் இன்னுமொரு தாயைப்போல் உன்னை உணர்கின்றேன்..

அந்நாள் முதல்

உன்  கிறுக்கல்கள்  ஓவியங்களாக, உன்  பேச்சுக்கள் கவிதைகளாக, உன் வார்த்தைகள் இலக்கியங்களாக, மாறிய அந்நாள் முதல் வரைந்தேன்  ஓவியமாக, எழுதினேன் கவிதைகளாக, படைத்தேன் இலக்கியமாக உன்னை......