Posts

மிகவும் பிடித்த பாடல் - மெல்லினமே மெல்லினமே

Image
இன்று வரை எனக்கு பிடித்த பாடலினை இவ்வலைத்தளத்தில் பதிவிடாமல் விடுபட்டிருப்பது இன்று நினைவுக்கு வந்தது. விஜயின் ஷாஜஹான் படத்தில் வரும் மெல்லினமே மெல்லினமே பாடல் எனக்கு பிடித்த பாடலாக எனது உள்ளத்தில் இடம் பெற்றிருக்கின்றது. இப்பாடலே எனக்கு என்றும் பேவரைட் பாடலாக இருக்கும் என நம்பியவனாக...... பகவான் பேசுவதில்லை,  அட பக்தியும் குறைவதுமில்லை,  காதலி பேசவுமில்லை,  என் காதல் குறைவதுமில்லை,   

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

Image
நமக்கு சும்மாவே நயன்தாராவை அப்படி பிடிக்கும், அதிலையும் ஒவ்வொரு சீன்லையும் இப்படி நடிச்சா.... Are You Okay Baby முதல் இறுதி வரை  முழு காதலையும், அன்பையும் கொட்டி தீர்த்திருக்கின்றனர் விஜய் சேதுபதியும், நயன்தாராவும்... இந்த பாடலுக்காகவே நேற்று படம் பாக்க போக வேண்டியதாயிற்று. இப்பாடல் இவ்வளவு அழகாக வர பாடுபட அனைவருக்கும் ஒரு சலுயூட் ஒவ்வொரு வரியும் அன்பின் ஆழத்தை அவ்வளவு அழகாக உணர்த்தி நிற்கின்றது. இருப்பினும் இவ்வரிகள் எனக்கு சம்திங் ஸ்பெஷல் தாய்மொழி போலே நீ வாழ்வாய் என்னில் உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்

Eid ul Adha – Haj Festival 2018 (22.08.2018) photos

Image

என்னவளின் பாசப்பிணைப்பு

Image
On 22nd August 2018 (Eid ul Adha – Haj Festival)

எது சாதனை??!!

Image
சிறு வயது முதல் (தரம் 4 முதல்) கல்வி நோக்கத்திற்காக சொந்த வீட்டை விட்டு பிரிந்து ஹொஸ்டலில் தங்கியதால் என்னவோ Home Sick எனும் வீட்டு ஏக்கம் வருவது மிக அரிது. எனக்கு விபரம் தெரிந்து எனது 30 வருட இவ்வுலக வாழ்க்கையில் கடந்த 3-4 வாரங்கள் மிகவும் சோர்வடைந்த நிலையிலே கழிந்தது, ஏன் நான் மனதளவில் உடைந்து விட்டேன் என்றே சொல்லலாம். தொடர் வேலைப்பழுவையும் தாண்டி எனது மகளை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டியது. இறுதியாக கடந்த 29.07.2018 ஆம் திகதி 5 நிமிடங்களே மகளுடன் இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அச்சமயம் அவளது பார்வை என்னால் மறக்கவே முடியாது!! மற்றவர்களால் எப்பொழுதும் முரடனாய் பார்க்கப்படும் நான் மனமுடைந்து காணப்பட்டேன். எனக்குள் இப்படியொரு மெல்லிய மனம் இருக்கின்றது என்பதை நானே 30 வயதில் தான் புரிந்து கொண்டேன். தாய்க்கு, தாரத்திற்கு, சகோதரத்திற்கு, பிள்ளைகளுக்கு என்று ஓடி ஓடி உழைக்கின்றோம். கடைசியில் அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை என்னமோ நாள் கணக்கு என்று நினைக்கும் போது மிகவும் வேதனையளிக்கின்றது. சில நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு 30 வயசாகிறது எதை சாதிச்சம், எதை கிழிச்சம் என்று. இங்கே நாமு...

இன்னுமொரு தாய் நீ

Image
உன் மடியில் தலை வைத்து தூங்கிய கணம் என்னுள் உணர்ந்தது தாயின் மடியில் தலை வைத்து தூங்கியது, பல இன்னல்களை இலகுவில் களைய உதவிய உன்மடி இனி கிடைக்குமோ! தாயின் மார்பில் தலை வைத்து அழுது சோர்வடைந்த ஞாபகம் எனக்கில்லை, உன் மார்பில் தலை சாய்ந்து என் சோர்வை நீக்கி இருக்கின்றேன்… தாயின் அன்பை எனக்களித்த அம்மார்பு இனி கிடைக்குமோ! தாய் கட்டளை இட்டு பல நாட்கள்; அதையும் தாண்டிய உன் அன்புக்கட்டளை அவ்வளவு இனிது… பல சாதனை ஜெயிக்க உதவிய அக்கட்டளைகளை இனி யார் இடுவார்! மொத்தத்தில் இன்னுமொரு தாயைப்போல் உன்னை உணர்கின்றேன்..

நிதியின் கல்யாணத்தின் போது முதலில் வேட்டி அணிந்த வேளை

Image
கடந்த 20/21.01.2018 ஆம் திகதி மீண்டும் ஒருமுறை யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. நண்பன் தயாநிதியின் திருமணத்திற்கு செல்லவே நண்பர் பட்டாளாம் புறப்பட்ட்து. அவ்வேளை வாழ்வின் முதன்முதலில் வேட்டி அணியும் வாய்ப்பு கிடைத்தது. வேட்டி தந்துதவிய சிவகுமாருக்கு நன்றிகள். வேட்டி அணிய ஆலோசனை வழங்கிய பெஸ்டி சிந்துஜாவுக்கு நன்றிகள்.