Posts

உணர்ந்தது

யாரும் யாருடைய வாழ்கையை நிர்ணயிக்க முடியாது.. நாம் சொல்லும் அறிவுரைகளை கேட்கலாம் கேட்காமல் விடலாம்; நாம் எமது அறிவுரைகளை திணிக்க முடியாது; அது எம்மை பெற்ற தாய் ஆயினும்; கட்டிய மனைவியாயினும்; பெற்றெடுத்த பிள்ளையாயினுக் சரியே! நாம் எமது பொறுப்புக்களை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து முடிப்பதில் தான் எமது கடமை தங்கியுள்ளது.

புதிய இடம்; புதிய நண்பர்கள்

Image
“No matter how we plan, the fate of the life is beyond that” வாழ்கையில் மற்றுமொரு திருப்பமாக புதிய வேலை வாய்ப்பை பெற்று கடந்த 3.10.2016 அன்று பொறுப்போற்றேன். JeyLabs/Ceymplon எனும் நிறுவனத்தில் Associate Tech Lead – SharePoint and Office 365 எனும் பதவியை பெற்றுக்கொண்டுள்ளேன். எல்லாம் வல்ல இறைவன் என்றும் போல் துணை புரிய வேண்டும். என்னை நம்பி பொறுப்புக்களை அளித்திருக்கும் Jey Srikantha அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடன்..

உணர்ந்தது…

நாம் பல உணசிகளுடனேயே படைக்கப்பட்டுள்ளோம்; முன்கோபம் அதில் ஒன்று. அடிக்கடி முன்கோபம் வருகிறது என உணர்ந்து அதை கட்டுப்படுத்த முயற்சிக்காவிட்டால் நாம் இழப்பது பல…

தூவானம் தூவ தூவ மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்

Image
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொலை தூரத்தில் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட தூவானம் தூவ தூவ எனும் ரோமியோ ஜூலியட் பட பாடல் என்னை முணுமுணுக்க வைத்தது. அது மட்டுமல்லாமல் அப்பாடலினை வேலைத்தளத்தில் வேலை செய்யும் போது கேட்கவும் வைத்தது. வரிகள் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இசைக்கேற்ற வரிகள் பாடலை மெருகேற்றியுள்ளதாகவே உணர்கிறேன். இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடலாசிரியர் தாமரை ஆகிய இருவரின் புரிந்துணர்வுக்கு ஒரு சபாஷ்.

கங்கை நதியே கங்கை நதியே – சோகங்களே வாழ்க்கையின் வேதமோ

Image
திடீரென இப்பாடல் இன்று நினைவுக்கு வந்தது. இப்பாடலில் வரும் கீழுள்ள வரிகள் வாழ்க்கையின் சோகப்பக்கங்களை புரட்டுவனாவாக அமைந்திருக்கின்றன… விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே விடியும் திசையென்ன இப்போது அதுவும் தெரியாதே நாளை எது வாழ்க்கை என்றே நீ சொல்லி நடப்பாயோ பாசம் தாழாமல் அங்கேயோ உள்ளம் துடிப்பாயோ காலம் செய்த கோலமின்று துன்பம் பொறுப்பாயோ சோகங்களே வாழ்க்கையின் வேதமோ …

எமது பயணத்தில் ஒரு உறவு – நூலகர் மர்ஹும் அப்துல் மஜீத்

கடந்த 2015-09-15 அன்று காலம் சென்ற அப்துல் மஜீத் (நூலகர்) அவர்கள் மருதமுனை ஒன்லைனின் பயணத்தில் எவ்வாறு இணைந்திருந்தார், அவருக்கும் மருதமுனை ஒன்லைனுக்கும் இடையிலான உறவு எவ்வாறு இருந்தது என்பதை நினைவூட்டுவதே இக்கட்டுரை நோக்கமாக இருக்கின்றது. மருதமுனை ஒன்லைனின் வளர்ச்சிக்கு நூலகர் மஜீத் அவர்களின் வளர்ச்சி முக்கியமானதொன்று என்பது பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் செய்த உதவியை நினைவு கூர்வது எனது கடமையாக இருக்கின்றது. மருதமுனை ஒன்லைனின் ஆரம்ப காலத்தில் நானும், என்னுடன் தோள் கொடுத்து உழைத்த முஹம்மது அஸ்றி அவர்களும் மருதமுனையின் வரலாற்றை ஆவணமாக்க முனைந்திருந்தோம். அந்த வகையில் அதன் ஒரு பகுதியாக மருதமுனையின் பொது ஸ்தாபனக்களின் வரலாற்றை ஒன்று சேர்க்க எண்ணினோம். அச்சந்தர்ப்பத்தில் பலரது ஆலோசைனைக்கமைய நூலகர் மஜீத் அவர்களை நானும், முஹம்மது அஸ்றி சந்தித்தோம். நான் நினைக்குமளவில் இது நடந்தது 2009-2010 காலப்பகுதியிலாகும். நாங்கள் எம்மை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே தேநீர் உபசாரமளித்ளித்தமை அவருடைய விருந்தோம்பல் பண்பை பறைசாற்றியது. இன்றிருப்பது போன்று மருதமுனை ஒன்லைன் அவ்வளவாக பிரசித்தி பெறாத கால...

பல நாள் ஆசை; நிறைவேறியது பாரதியால் – யாழ்ப்பாண பயணம்

Image
வடக்கின் தலைநகரமான யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டும் என்பது எனது பல நாள் ஆசைகளில் ஒன்று. ஆனாலும் சந்தர்ப்பம் கிடைக்காமலே இருந்தது. இருப்பினும் கடந்த 06.06.2015, 07.06.015 ஆம் திகதிகளில் எனது ஆசை என்னுடைய நண்பர்களினால் நிறைவேறியது. திருமண வைபவம் ஒன்றிற்கு செல்ல நானும், எனது நண்பர்களான பாரதி , வோல்ட்டன் , திலக் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணமானோம் ( அஜந்தன் கடும் படிப்பாம் ). முதல் நாள் திருமண வைபவத்தில் போனாலும் இரண்டாவது நாள் பல இடங்களை சுற்றிப்பாக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முக்கியமாக யாழ்பாணத்தின் புராதன கதைகளையும் சிறப்புக்களையும் விபரித்த நண்பன் சிவ குமாருக்கு நன்றிகள். சென்ற இடங்களை படங்கள் மூலம் காணலாம். படங்கள் அனைத்தும் பாரதி சிவச்சந்திரன் இனால் எடுக்கப்பட்டவை. அனைத்து படங்களும் எனது முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. கீழே உள்ள முகவரியில் https://www.facebook.com/media/set/?set=a.10206570236235721.1073741873.1265861043&type=3